Wednesday, 11 May 2016

உண்மைதான்

மௌனம் நிலவுகிறது - மனசு 
மட்டும் வலிக்கிறது 
இவ்வுலகில் 
பணம் வலிமையானதா ?.... 
குணம் வலிமையானதா ?.... 

என 
நீ கேட்டு 
அவற்றுக்கும் நீயே 
பதிலுரைத்தாய் 
இவ்வாறு..... 

எடைபோட்டுப் பார்த்தால் 
பணமே வலிமையானதாய் 
காட்சி அளிக்கிறது இவ்வுலகில் 
குணமோ தூக்கி எறியப்படுகிறது 
குப்பையில் என்றாய்.......... 

இதுவே நடைமுறை 
உலகமென அழகாய் 
எடுத்துரைத்தாய் எனதன்பே !.. 

அதுவே உண்மையென 
100 % உணர்ந்தேன் இன்று 
ஏழ்மை கொண்ட என்னிடத்தில் 
என்ன உள்ளதென - நீ 
தூற்றிச் சென்றதன் மூலம் !!.......... 

No comments:

Post a Comment