Wednesday, 11 May 2016

வறுமையின் தலைமகன்

தத்தித் தவழ்ந்திடும் 
வயதில் 
சிந்திச் சிதறுது 
வியர்வை...! 

நோக்கம் பகட்டுகள் இல்லை... 
சில சோற்றுப் பருக்கையே தேவை...! 

வாழ வழியேதும் இல்லை 
சிறுபார்வை ஒன்றே 
இரக்கத்தின் எல்லை...! 

இந்த வாழ்வில் இனிமைகள் இல்லை..! 
இவை வேண்டி விரும்பியதில்லை...! 

எந்தன் வேர்வை 
வழியிலே நாளை 
புது விடியல் பிறக்கும் நல் வேளை...!

No comments:

Post a Comment